சனி, 26 பிப்ரவரி, 2011

பெண்ணியம்



இன்று பிறந்த 

பெண் சிசுவே கேள் 
கலாச்சாரம்,பண்பாடு 
பெண்ணிய புராணம் 
காரணமாய் இங்கு 
பிறந்திட தவமிருதாயானால் 
ஒரு முறை கேள் பிறக்கும் முன
் 
நீ மழலை பருவம் எய்தும் வேளையில்
உன் பாதம் வருடி கொஞ்சி 
மகிழும் இவ்வுலகம் 
உன் பருவ வயதில் 
கொள்ளிக்கண்களால 
உன் அழகை சுட்டெரிக்கும்
உடல் உபாதை,தேற்றல் தேடும் ் 
வேளைதனில் ஆறுதலுக்கு பதிலாய் 
தீட்டு என்று 
கிழ்சாதி பெண்ணாய் 
தள்ளி வைக்கபடுவாய் மறவாதே 
சாமியும் பெண் என்று உணராதவர்கள்..

இது தான் உலகம் 
என எண்ணி நீ உன் விழிதலர்த்தும் 
வேளைதன்னில் இவன்தான் உன் ஆடவன் 
என உன் அருகே ஒருவன் வந்தமர்வான் 
உன் தலை குட்டபெற்று 
நீ தலைகுணிவாய 
இது தான் தருணம் என 
உன் கழுத்தில் கயிறு கட்டி 
உன்னை தன அடிமையாக்கி கொள்வான் உன் மணாளன்
ஊரே அவனை அதிகாரம் செய்ய 
அவன் உனை அதிகாரம் செய்வான் 
நீ தலை குணிவாய

அடுபங்கரை,பள்ளியறை 
உன் உலகமாகி போகும் 
இரண்டாவது முறை 
விழித்துக்கொள்ள முற்படும் போது 
உன் மடியில் மழலை சுமப்பாய் 
இவனாவது தன ஆடவன் 
போலில்லாமல் நல்லவனை போல் 
வழத்திட எண்ணி தோற்று போவாய் 

அவனுக்கு தன்னை போல் 
ஒரு உமையவள் தேடியளைவாய் 
அவளது உலகம் வேறாய் இருக்கும் 
அவள் பிறந்தவுடன் அதித அன்பு சுததிரதுடன் வழர்த்தவள் 
உடை சுருக்கி 
அழகை மிளிரசெய்துவழர்த்தவள் 
கிழித்த உடை அநாகரிகம் என நினைத்த ஊரில்
கிழிந்தால் தான் நாகரிகமாகி போயிருக்கும.
் 
மது மாது,பொன்னாசை பெண்ணாசை 
இதில் கெட்டது உடன் ் சேர்த்தால் 
அவளும் செர்த்திருப்பால் அதுடன் 
ஜீன்ஸ் டி ஷர்ட் அவள் உடையாகி இருக்கும் 
தமிழென்றால் எந்த ஊரென்று
தங்க்ளிஷ்ல் பேசிடுவாள் 
கேட்டல் இது தான் பெண்ணியம் என்பால
் 
நல்லவளேன்று மகனுக்கு முடிப்பாய்
இதுநாள் வரை தான் வாங்கிய குட்டுகளை
அவளுக்கு அழிக்க எண்ணி 
அவளுடன் குடுமி பந்தம் காண்பாய் 
ஆனால் அவளது மந்திரத்தால் 
உன் மகனை கொண்டே 
முதியோர் காப்பகம் சேர்க்கபடுவாய் 
இப்போது உன்னுடன் சேர்த்து உன் மணாளன் தலையும் குனியும் 
தன மகனுடன் பேரனையும் காண 
வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என 
காத்திருப்பாய் ..... 

ஒன்றை மட்டும் மனதில் கொள் 
அதித கட்டுப்பாடும் 
சுததிரமும் பெண்ணியம் இல்லைஎன்பதை

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வறுமை


கடை வீதிகளில் பயணிக்கையில்
சாலை ஓர கடைகளில்
ஆடைகள் விற்கும்
விடலைகளையும்

சாலை நிருத்தகளில்
தன மழலையால்
கைவிடப்பட்ட
மூதாட்டியின்
வயிற்று கெஞ்சலும்

இரக்கமில்லா இறைவனால்
உறுப்புகளை இழந்து
மாற்று திறன் தேடவும்
பட்டினி பிணி தீர்க்கவும்
மனிதம் மறந்த
மாந்தர்க்கு நடுவே
கையேந்தும்
சில உயிரினங்களும்

இன்றைக்கு குடிக்க
ஒரு கடி கிடைதாள்
போதுமென்று நிறுத்தங்களில்
கனத்த தனது குரலில்
உரத்து இசைக்கும்
மறைத்த முதல்வரின்
பாடல் வரிகளை
பெருமிதம் மற்றும்
சற்று தருக்குடன் இசைக்கும்
பெரிசுகளை
பார்க்கும் பொழுது
இவர்களுக்கும்
வாழ்வுண்டு என தோன்றும்
ஆனால் மாற்றம் எப்போது......

சனி, 12 பிப்ரவரி, 2011

தாய்

நானுறங்கும் வேளைதன்னில்
என் விழிபார்த்து
தன் விழிபரிவுகாட்டுவால்
சிறு இடரலேனும்
ஏற்படாவண்ணம்
என்னை வழ்ர்தேடுப்பால் என் தாய்.....