ஞாயிறு, 12 மே, 2013

கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ

5-May-13

குழலி :) @guzhali_ 1h 

ரகசியமென தயங்கித் தயங்கி கூறும் விஷயத்தை சிறு சிரிப்பினால் அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாத விஷயமாக்கிவிடுகின்றனர் சிலர்.

நாயோன்@writernaayon 3 May 

மகள் நட்சத்திரங்களை எண்ணுகிறாள். எண்ண முடியாது என்பது வேறுவிஷயம், என் கவலை அவளுக்கு 100க்குமேல் தெரியாது என்பதுதான்!

The Princess@rajakumaari 23h 

எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் உடையையும் உடலையும் தாண்டி வரும் விமர்சனங்கள் குறைவு பெண்களுக்கு

வெ.பெத்துசாமி@Pethusamy 18h 

குழந்தைகளுடன் விளையாடும்போது தற்காலிகமாய் கிடைக்கிறது, கடந்துபோன பால்யம்

எழிலினி@Ezhilini 4 May 

வெயிலைப்போல் ரசிக்க வேண்டும், வீதியில் போகும் விதவிதமான மனுஷாளை.

பிரம்மன்
5/6/2013
பிரம்மன்@altappu 3h 

தோசை ஒரு palindrome .ஏன்னா தோசையை திருப்பி போட்டாலும் தோசைதான் வரும். இட்லி வராது. கரெக்டா? # அதிகாலை சிந்தனைகள்

எழிலினி@Ezhilini 5h 

என்னை நானே விரும்புவதால் யாரையும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை.
வெ.பெத்துசாமி

வெ.பெத்துசாமி@Pethusamy 5h 

கெட்டுப் போகாத இராகம் எது? 'சுத்த' தன்யாசி. #நாங்களும் ப்ளேடு போடுவோமில்ல :-D

வெ.பெத்துசாமி@Pethusamy 8h 

எத்தனை நாள் "Dust bin" ல் கிடந்தாலும் அழுகிப்போவதில்லை #கம்ப்யூட்டர் பைல்கள்
குழலி :)

குழலி :) @guzhali_ 21h 

ஆண்களை அழகாக்கி ,மாயம் செய்கிறது வேஷ்டி சட்டை

காக்கைச் சித்தர்@vandavaalam 22h 

"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது

குழலி :) @guzhali_ 22h 

கிராமத்து திருவிழாக்களில் தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது கும்மி.

மிருதுளா @mrithulaM 23h 

நமக்கு தேவைப்படாத சமயங்களில் செலுத்தப்படும் அன்பு தொல்லையாகிப் போகிறது.
5/9/2013
கார்த்தி@get2karthik 11h 

குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம்.

RT @umakrishh ட்ரீட்.நமக்கு யாராச்சும் தரேன்னு சொன்னா தேன் வந்து பாயற மாதிரியும் நம்மகிட்ட கேட்டா ஈயத்தை காய்ச்சி ஊத்தற மாதிரியும் இருக்கு

வெ.பெத்துசாமி@Pethusamy 19h 

கோயில்களில் சிறப்புக் கட்டண வழிபாடு குறித்து கிண்டல் செய்பவர்கள், தட்கால் டிக்கட் புக்கிங் குறித்து கிண்டல் செய்வதில்லை

Prathipa@Talkativewriter 21h 

தான் செய்த தவறை அழகாய் மறைக்க தெரிந்தவர் ஒழுக்கமானவர் எனப்படுகிறார்!
5/11/2013
எழிலினி@Ezhilini 3h 

கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாய் வாழ முயற்சிக்கும் போதெல்லாம், இழந்த பொருளின்மேல் ஏக்கம் தடையாய் வருகிறது

Prathipa@Talkativewriter 9 May 

Heart and mind could be husband and wife- Never agree with each other! Idiots!

Prathipa@Talkativewriter 9 May 

If a woman is brilliant in a relationship, break up is highly not impossible!

ஆல்தோட்டபூபதி@thoatta 10 May 

அண்ணாச்சி, பஸ் டிரைவருங்கள ஹெல்மெட் போட சொன்னது வாஸ்தவந்தான், அதுக்காக வாக்கிங் போறப்பவுமா போட்டுக்கிட்டு வருவீங்க?

arasu@love_1691 8 Jan 12 

கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ

arasu@love_1691 25 Jun 

மைய்யடர் கானகமுன் கண்கள்.. கானகந்தேடும் சிறு பறவை என் உயிர் .

Sri@Sricalifornia 10 May 

பழைய புத்தகம். நடு நடுவே அப்பாவின் குறிப்புகள்.புரட்டும் வேளையில் அனிச்சையாக கண்களில் ஈரம். என் சீதனம்

ஆல்தோட்டபூபதி@thoatta 10 May 

ஈமு கோழி விளம்பர சீசன் போய்,தீபாவளி ஜவுளிகள் விளம்பர சீசன் போய், ஏசி ஃப்ரிட்ஜ் விளம்பர சீசன் போய் இப்ப பள்ளிக்கூட விளம்பர சீசன்.

வெ.பெத்துசாமி@Pethusamy 9 May 

என் கவிதையைப் படித்துப் பார்த்த நண்பன் ஒன்றுமே புரியவில்லை என்றான். ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும்

ஆல்தோட்டபூபதி@thoatta 9 May 

பல பெற்றோர்களுக்கு, பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்யும் பணம் என்பது INVESTMENT.!!

TJ of VJawards 2013@get2karthik 8 May 

குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம்.

சனி, 4 மே, 2013

அவனது விழிகள்



குழலி :) @guzhali_ 2h 

அவனது விழிகள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்திலும் என்றுமே அழகிதான் நான்! ;)
குழலி :)

குழலி :) @guzhali_ 5h 

நிழலை இழந்த கிளைகளற்ற மரம் போலாகிறது மனம்; சிலரை இழந்த பின்பு. .

குழலி :) @guzhali_ 14 Apr 

நன்கு பழக்கப்பட்ட இடத்திலும்கூட அந்நியமாக உணர்கிறோம் சிலநேரங்களில். .
கூத்தாடி

கூத்தாடி@Koothaadi 7h 

பழம் தின்று விதை இடும் பறவை போல சுய நலத்தின் எச்சமாகவேனும் கொஞ்சம் பொது நலம் பேணுங்கள்

குழலி :) @guzhali_ 19 Apr 

சில உருவங்கள் விழித்திரைக்குள் ஊடுருவும்போதெல்லாம் முகத்தில் படருகிறது துயரத்தின் சாயல். .

வசந்தன். @vasanthen 18 Apr 

ஒரு பியர் என் தனிமையை அருந்திக்கொண்டிருக்கிறது.

குழலி :) @guzhali_ 18 Apr 

உன்னிடம் மட்டும் நான் வெளிப்படுத்தும் பைத்தியக்காரத்தனங்களைக்கொண்டு,பைத்தியமென்று கணித்துவிடாதே என்னை! #பைத்தியக்கவித

குழலி :) @guzhali_ 18 Apr 

'நான் கோபமாக இருக்கிறேன்' எனக் கூறிய பிறகு, அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதுதான் என் கோபத்தின் சிறப்பு.

21-Apr-13
குழலி :) @guzhali_ 15h 

என் கன்னத்தின்மேல் வீழ்ந்து சிதறி உருவிழந்த ஒற்றை முதல் மழைத்துளியைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே எனை நனைத்தது அப்பெரும் மழை:)

வசந்தன்.
வசந்தன். @vasanthen 15h 

கேள்விகளோடு பிறந்தவள் நீ. பதில்களோடு தொலைந்தவன் நான்.

வசந்தன். @vasanthen 15h 

யாருமற்ற வனாந்திரத்தில் தனியாய் அலைந்து கொண்டிருக்கிறது ஒரு தனிமை.

சி.சரவணகார்த்திகேயன்@writercsk 19h 

சோறூட்டும் பெண்கள் ஒரு சிட்டிகை அன்பையும் சேர்த்தே ஊட்டுகிறார்கள்.

22-Apr-13
Velayudhan Done
வாங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா கூப்பிட்டு பந்தியில் அமர வைக்கும் கலாசாரம் மறைந்து.......
போங்க எடுத்துக்குங்க’ன்னு ஒருமாதிரியா சொல்லற.............”பவேட் ” கலாசாரம் பெருகி விட்டது.!!!

Unlike · · Share · 4 hours ago near Ahmedabad, Gujarat · 

23-Apr-13
Raajaachandrasekar@raajaacs 10h 

இரண்டு புள்ளிகளுக்கு இடையில் இருக்கும் தூரத்தை இடைவெளியாகப் பார்ப்பவர்கள் எளிதில் கடந்து விடுகிறார்கள்.

குழலி :) @guzhali_ 10h 

என் பிடிவாதங்களுக்கு அளவில்லா அங்கீகாரம் தருவதால்தான், உன்னிடம் மட்டும் பிடிவாதக்காரியாகிவிட்டேன். .




திங்கள், 8 ஏப்ரல், 2013

ஜன்னல் அருகே


கார்க்கி@iamkarki 13 Jun 11 

தோழ‌ர் என்றால் புர‌ட்சியாக‌வும், தோழி என்றால் ரொமான்ஸாக‌வும் அர்த்த‌ம் தொணிப்ப‌து விந்தையாக‌ உள்ள‌து
               *******
sowmya@arattaigirl 29 Jun 11 

ஜன்னல் அருகே அமர்ந்திருந்தும்.... உன்னுடனான பேருந்து பயணத்தில் வேடிக்கை பார்க்க வெளியே எதுவுமில்லை
          *******
வசந்தன். @vasanthen 8 Apr 

தூக்கத்தில் விழித்திருந்ததாய் ஒரு கனவு. எழுந்த பின் கனவில் தூங்கி விட்டேன்.
            *******   

வசந்தன். @vasanthen 8 Apr 

என்னை பயமுறுத்துவதே உனக்கு வேலையாகி போனது. தயவு செய்து என் மீதான அன்பை குறைத்துக்கொள்.
        *******
Iyyanars*@iyyanars 7 Apr 

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்டதாலேயே,உண்மையில் உங்களால் `கடவுளை`உணர முடிவதில்லை!
         *******
குழலி :) @guzhali_ 7 Apr 

என்னை நம்பாதே என வெளிப்படையாகக் கூறுபவர்களின்மீது ஏனோ உடனே நம்பிக்கை வந்துவிடுகிறது.
         *******
குழலி :) @guzhali_ 7 Apr 

நாம் புரிந்துகொண்டபின், மேலும் சுவாரசியமாகிவிடுகிறார்கள் சில மனிதர்கள். .      

செவ்வாய், 12 மார்ச், 2013

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet

more details pls click the link below

https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/239983426107165

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.


Thank info
Puthiya Thalaimurai

வியாழன், 7 பிப்ரவரி, 2013

எழுதவேண்டும்

எதையாவது எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன்,அனால் எழுதுவது இல்லை..
அது தயக்கம் காரணமாகவே தான் என்பதில் ஐய்யமில்லை எனக்கு(அப்படி என்னத்த எழுதபோற) ....ஏனென்றால் இந்த வலையுகத்தில் நிறையவே எழதுகிறார்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து காணமல் போய்விடுவோமோ என்கிற பயம் தான் முதல் காரணம்.
இன்று முதல் எதையாவது கிறுக்கி வைப்போமே என்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்..