திங்கள், 17 பிப்ரவரி, 2014

சீலிங் ஃபேனின் கதை

 
பிலிப் தியல் ஜெர்மனியைச் சேர்ந்தவர். 1868ஆம் ஆண்டு தனது 21ஆம் வயதில் வேலை தேடி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குப் போனார். ஒரு தைரியத்தில்தான் அவர் அங்கே போனார். ஆனால் அங்கு வேலை கிடைப்பது, அதுவும் அவர் நினைத்தபடியான ஒரு நல்ல வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. சின்ன சின்ன இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களில்தான் வேலை கிடைத்தது. அம்மாதிரியான நிறுவனங்களில் வேலை வெகு நாள்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தார்.
ஒரு வழியாக அமெரிக்காவின் மிகப் பெரிய இயந்திரத் தயாரிப்பு நிறுவனமான சிங்கர் தயாரிப்பு நிறுவனத்தில் பிலிப் தியலுக்கு ஒரு வேலை கிடைத்தது. ஐஸ் மெரிட் சிங்கரின் நிறுவனமான அது, தையல் இயந்திரங்கள் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. பிலிப்புக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு. அவரும் இதைப் பயன்படுத்தித் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். வேலையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பால் வெகு விரைவில் பதவி உயர்வு பெற்று, அதன் தயாரிப்பு மேம்பாட்டு அதிகாரி ஆனார் பிலிப்.
சிங்கர் தையல் கருவி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில்தான் அவர் மேற்கூரை மின்விசிறியை (Ceiling Fan) கண்டுபிடித்தார். தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றியபோதுதான், மேற்கூரை மின்விசிறி கண்டுபிடிக்கும் சோதனையை அவர் மேற்கொண்டார். அப்போது தையல் இயந்திரத் தயாரிப்பில் பல புதிய யுக்திகளைப் பிலிப் கொண்டுவந்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் தையல் இயந்திர மோட்டாருடன் இறக்கைகளை இணைத்துப் பார்க்கலாம் என அவருக்குத் தற்செயலாகத் தோன்றியுள்ளது. அதற்கு முன்பே மேஜை மின்விசிறி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அவர் இதைச் செய்து பார்த்தார்.
1880கள் கண்டுபிடிப்புகளின் காலம் எனலாம். அப்போது, அமெரிக்கா முழுவதும் பயன்பாட்டுக்கான கருவிகள் துரிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பிலிப் அலுவலக ரீதியிலான கண்டுபிடிப்புகளைக்கூடத் தன் வீட்டில் பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படித் தன் வீட்டில் பணி செய்துகொண்டிருந்த ஒரு நாளில்தான், கூரையில் தன் மின்விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே பிலிப், மின் காயிலுடன் கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்திருந்தார். எடிசன் கண்டுபிடித்த மின் விளக்கிற்குப் பிலிப்பின் விளக்குதான் ஆதாரமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்துச் சர்ச்சையும் இருக்கிறது.
விளக்கையே உற்று நோக்கிக்கொண்டிருந்த பிலிப்பின் மனதில் விளக்குடன் இணைந்த மேற்கூரை மின்விசிறியைக் கண்டுபிடிக்கும் எண்ணம் உதித்துள்ளது. அதை நிரூபிப்பது போலவே, தொடக்கத்தில் அவர் சந்தைப்படுத்திய மின்விசிறி மின் விளக்குடன் கூடியதாகத்தான் இருந்தது. இது மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப், எலக்ட்ரிக் டிரில்லிங் இயந்திரம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுக்காக பிலிப் இன்று நினைவுகூரப்படுகிறார்.
அமெரிக்காவுக்கு வேலை தேடி ஒரு சாதாரண மனிதனாக வந்த பிலிப் தியல், தன் அபாரமான உழைப்பாலும் திறமையாலும் முன்னேறி 1906இல் ‘தியல் தயாரிப்பு நிறுவனம்’ என்னும் பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். மோட்டார், மின் விசிறி உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களை அந்நிறுவனம் தயாரித்து, சந்தைப்படுத்தியது.



ஆதாரம்:-
5%E0%AE%A4%E0%AF%88/article5696982.ece?homepage=true 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மணிமங்கலம்



அப்பாடா... இன்று ஒரு நாளாவது நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று சனிக்கிழமை நண்பகல் சாப்பிட்டு விட்டு சாய்கையில், செல்போன் சிணுங்கியது, கிளம்புங்க "மணிமங்கலம்" போகலாம் என்று ரமேஷ் சொல்ல, அரை மனதுடன் சம்மதித்தேன், நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் தூங்கிடாதீங்க என்று கூறி விட்டு போனை துண்டித்துவிட்டார்.
"மணிமங்கலம்" தாம்பரத்திற்கு மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் அழகான கிராமம், தமிழகத்தில் உள்ள சில ஊர்களோடு மட்டும் தான் நீண்ட நெடிய வரலாறு பின்னிப் பிணைந்திருக்கும், அப்படிப்பட்ட சில ஊர்களின் பட்டியலில் இந்த மணிமங்கலமும் வருகின்றது, நூறு இருநூறு ஆண்டு வரலாறு இல்லை, 1300 வருட வரலாறு!.

இந்தியாவிலேயே 9 மன்னர்கள் தான் தன்னுடைய வாழ்நாளில் தோல்வியே சந்தித்திறாத மனிதர்கள் என்று வரலாறு அழைக்கின்றது, இந்த ஒன்பதில் தமிழகத்தை ஆண்ட 5 மன்னர்கள் உள்ளடுங்குவர், அந்த ஐந்தில் ஒருவன் தான் மாமல்லன் என்று அழைக்கப்பட்ட முதலாம் "நரசிம்ம பல்லவன்" ஆம் நரசிம்ம பல்லவனுக்கும் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்குமிடையே பெரும் போர் நடந்தேறிய இடம் தான் இந்த மணிமங்கலம்,

காஞ்சிபுரம் அருகே இருக்கும் "புள்ளலூர்" என்ற இடத்தில் மாமல்லனின் தந்தை மகேந்திர பல்லவன் புலிகேசியுடன் போரிடுகிறான், போரில் பல்லவர்கள் சில பகுதிகளை இழக்கிறார்கள், ஆனால் புலிகேசியால் காஞ்சிபுரத்தை கைப்பற்ற முடியவில்லை, ஆதலால் மீண்டும் பெரும் படைதிரட்டிக்கொண்டு புலிகேசி பல்லவனுடன் போரிட வருகிறான், இம்முறை போர் மணிமங்கலத்தில் நடக்கின்றது, இம்முறை புலிகேசியை மாமல்லன் வென்றுவிடுகிறான், இவனை விட்டு வைத்தால் மீண்டும் மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பான் என்று மாமல்லன் தன்னுடைய படைத் தளபதி "பரஞ்சோதியுடன்" அவன் நாட்டிற்கே சென்று தன தந்தையை தோல்வியுறச் செய்தவனான புலிகேசியை கொன்று, அவன் தலை நகரான வாதாபியை எரித்து தரைமட்டமாக்குகிறான், அன்று அழிந்த வாதாபி அதன் பிறகு மீண்டும் எந்த மன்னனுக்கும் தலை நகராய் அமைந்ததே இல்லை என்றால் எவ்வளவு பெரிய பேரழிவு என்று யோசித்துப் பாருங்கள். அங்கிருந்த வெற்றியின் நினைவாய் பரஞ்சோதி கொண்டு வந்த கணபதி இன்றும் தமிழ்நாட்டில் அருள்புரிகிறார்.

ஊரை வந்தடைந்தோம், சென்னைக்கு அருகே இருந்தாலும் விவசாயம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது, ஏரியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வாய்காலில் பாய்ந்துகொண்டே இருந்ததை காணமுடிந்தது, வாக்காளில் நீர் ஓடுவதால் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து அங்கிருந்த கிணறு, குளங்கள் எல்லாம் தரை தொடும் அளவிற்கு நீர் நிறைந்திருந்தது.

ஊர் பற்றியே நிறைய எழுதிவிட்டதால் கோயிலை பற்றி சுருக்கமாக எழுவேண்டிய கட்டாயத்தில் எழுதுகிறேன், போருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை மனிதர்கள் அனைவருக்கும் சமமாகத்தான் இந்த பூமியை படைத்தேன், அடித்துக்கொள்ளாமல் வாழத்தான் ஆறாம் அறிவையும் கொடுதேன் இருப்பினின் ரத்த ஆறு ஓடிய மண்ணில் எனக்கென்ன வேலை என்பதைப் போல் ஊரை விட்டு விலகி வயலுக்கு நடுவே இருந்தார் "தர்மேசுவரர்". சோழர் கல்வெட்டில் "தன்மீச்சரர்" என அழைக்கப்பட்ட இறைவன் தற்போது தர்மேசுவரர் என வணங்கப்படுகிறார். இக்கோவிலில் 10ம் நுாற்றாண்டு துவங்கி, மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் போன்றோரின் கால கல்வெட்டுக்கள் வரை உள்ளன. இந்த கோயிலில் நவகண்ட சிற்பங்களையும் கண்டோம்.

Sasi Dharan's photo. 
போரில் தன்னுடைய மன்னன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அல்லது இந்த கோயில் நல்லமுறையில் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, நிறைய வீரர்கள் தங்களுடைய தலைகளை காணிக்கையாக தந்துள்ளனர். தூங்கானை மாட வடிவில் அமைந்த அற்புதமான கோயில், நல்ல வேலைபாடுகள் உள்ளது, பெரிய கோயில்களுக்கு சென்று வரிசையில் நின்று முட்டி மோதி நிம்மதியை இழப்பதை விட, இயற்கை எழில் சூழ்ந்த மக்கள் நடமாட்டம் இல்லாத சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அமைதியான இடத்தில் இருக்கும் இந்த ஊரை காண கட்டாயம் செல்லுங்கள். உங்களை எதிர்க்க புலிகேசி இல்லை. ஆனால் உங்களை வரவேற்க தர்மேசுவரர் இருக்கிறார். பயணம் இனிதாகட்டும்.
 
 
 
 
 
 
 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

சுவையான நகை இது நகைச்சுவை


ஒருவர்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...
ஒருவர் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..? ஐந்து ரூபாய்க்கு தாங்க..

இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்சி, கொக்ககோலா விக்கும்...

அங்க போயி இருபது ரூபா பெப்சிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
நண்பர்கள் இதை கண்டிப்பாக பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

சனி, 8 பிப்ரவரி, 2014

வெள்ளைப் பூச்சு

 Return to frontpage


ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும்.
இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மேற்கூரைகளை அடர் வண்ணங்களில் பூசுவது வழக்கம்.
அடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும்தன்மையுடைது. வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் ஃபேனை போட்டவுடன் உஷ்ணக் காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் அடர் வண்ணப் பூச்சு தேவையற்றதே.
இதற்கு மாற்றாக வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது. வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம்.
இதெப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்? சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும். இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் . இதெல்லாம் நேரடி பயன்கள். ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்.
இப்போது மேலே உள்ள தலைப்பையும் முதல் பத்தியையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்.
Courtasy to THE HINDU
 

இப்படித்தான்-வந்தது-மேற்கத்தியக்-கட்டிடக்கலை

 Return to frontpage

ஒரு வீட்டைத் தாங்கி நிற்பது கட்டுமானப் பொருட்கள் என நாம் நினைத்தால் தவறு. வலிமையான அஸ்திவாரம்தான் ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த அஸ்திவாரத்தில் மண்ணின் தன்மையும் அடங்கியிருக்கிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்பதான கட்டிடங்களை எழுப்ப முடியும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் மண்ணின் இயல்புக்கேற்பவே அஸ்திவாரம் பற்றிய கணக்குகள் உள்ளன.

நான்கு முதல் 6 அங்குல விட்டமுள்ள சின்னச் சின்னக் கழிகளைக் கொண்டு ஒரு அடி இடைவெளியில் நட்டு அஸ்திவாரம் தோண
்டுவதே பாரம்பரியப் பழக்கம். அதில் மூங்கில் கழிகளைப் பூச்சி அரிக்காத விதத்தில் பாடம் செய்வார்கள். அவற்றின் மேல் பகுதியைத் துணியால் கட்டுவார்கள். ஏனெனில் நிலத்தில் சுத்தியால் அடித்துப் பதிக்கும்போது அந்தக் கழிகள் உடையாமல் இருக்க இந்த ஏற்பாடு.

மண் இளகி, இறுகப் பிடிக்கும் வரை கழிகளைச் சுத்தியால் அடிப்பார்கள். தற்போது போடப்படும் கான்கிரீட் அடித்தளம் கட்டும் முறைக்குச் சமமான நடைமுறையே இது. இந்தக் கழிகளுக்கு நடுவில் கற்கலவைகளையும், செங்கற்களையும் உள்ளூர் பொருட்களையும் போட்டு அடித்தளம் அமைப்பதே பாரம்பரிய முறை.

ஒரு கட்டிடம் எவ்வளவு பாரம் தாங்கும் என்பதை இப்படிக் கணக்குப் பார்த்துக் கட்டினார்கள் நம் மூதாதையர்கள். கட்டிடத்தின் சுமையை அஸ்திவாரம் எவ்வளவு தாங்கும் என்பதைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தாலும் கட்டிடக் கலை என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இந்த முறையை நம் மூதாதையர்கள் பின்பற்றினர். ஆனால், நாம் கட்டும் கட்டிடங்களின் பாணி வெள்ளையர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது


Courtesy to The Hindu Tamil

 Click Me to read full article

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்

தமிழுக்கு  அணிகலன் சேர்க்கும் ஒரெழுத்தில் உண்டான சொற்களும் அதன் பொருளும்
   தமிழ் மொழியில் மொத்தம் 246  எழுத்துக்களில் 42  எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .

ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )

ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

சோ-மதில்,அரண்

ஊ -இறைச்சி, உணவு

ஐ -அழகு, ஐந்து, ஐயம்

ஓ -சென்று தாக்குதல்

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு

மோ -முகர்தல்

கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம்

கூ - பூமி , கூவு

கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)

சா -சாதல் ,சோர்தல் 

        சீ -வெருப்புச்சொல்  ,சீத்தல் 

        சே-காளைமாடு ,சிவப்பு 

       சோ -மதில் ,நகல் 


      வா -வருகை

      வீ -மலர் ,விரும்புதல் 
      வை -வைத்தல் ,வைதல்

       வௌ -வவ்வுதல் 
 
நா -நாக்கு ,அயலார் 

     நீ -நீ (முன்னிலை )

      நை -வருந்து 

     நோ -நோய் ,துன்பம் 


பா -அழகு ,பாட்டு

        பூ-மலர் ,புவி 
       பே -நுரை ,அக்கம் 

       பை -கொள்கலம் ,இளமை 

       போ-செல் 


தா -கொடு ,அழிவு, தாண்டு

         தீ -நெருப்பு 
     
         தூ -தூய்மை ,பகை 

         தே -கடவுள் 

          தை -தமிழ் மாதம்
 
என்பனப் போன்று   பல  வகை உண்டு.