சனி, 4 மே, 2013

அவனது விழிகள்



குழலி :) @guzhali_ 2h 

அவனது விழிகள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்திலும் என்றுமே அழகிதான் நான்! ;)
குழலி :)

குழலி :) @guzhali_ 5h 

நிழலை இழந்த கிளைகளற்ற மரம் போலாகிறது மனம்; சிலரை இழந்த பின்பு. .

குழலி :) @guzhali_ 14 Apr 

நன்கு பழக்கப்பட்ட இடத்திலும்கூட அந்நியமாக உணர்கிறோம் சிலநேரங்களில். .
கூத்தாடி

கூத்தாடி@Koothaadi 7h 

பழம் தின்று விதை இடும் பறவை போல சுய நலத்தின் எச்சமாகவேனும் கொஞ்சம் பொது நலம் பேணுங்கள்

குழலி :) @guzhali_ 19 Apr 

சில உருவங்கள் விழித்திரைக்குள் ஊடுருவும்போதெல்லாம் முகத்தில் படருகிறது துயரத்தின் சாயல். .

வசந்தன். @vasanthen 18 Apr 

ஒரு பியர் என் தனிமையை அருந்திக்கொண்டிருக்கிறது.

குழலி :) @guzhali_ 18 Apr 

உன்னிடம் மட்டும் நான் வெளிப்படுத்தும் பைத்தியக்காரத்தனங்களைக்கொண்டு,பைத்தியமென்று கணித்துவிடாதே என்னை! #பைத்தியக்கவித

குழலி :) @guzhali_ 18 Apr 

'நான் கோபமாக இருக்கிறேன்' எனக் கூறிய பிறகு, அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதுதான் என் கோபத்தின் சிறப்பு.

21-Apr-13
குழலி :) @guzhali_ 15h 

என் கன்னத்தின்மேல் வீழ்ந்து சிதறி உருவிழந்த ஒற்றை முதல் மழைத்துளியைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே எனை நனைத்தது அப்பெரும் மழை:)

வசந்தன்.
வசந்தன். @vasanthen 15h 

கேள்விகளோடு பிறந்தவள் நீ. பதில்களோடு தொலைந்தவன் நான்.

வசந்தன். @vasanthen 15h 

யாருமற்ற வனாந்திரத்தில் தனியாய் அலைந்து கொண்டிருக்கிறது ஒரு தனிமை.

சி.சரவணகார்த்திகேயன்@writercsk 19h 

சோறூட்டும் பெண்கள் ஒரு சிட்டிகை அன்பையும் சேர்த்தே ஊட்டுகிறார்கள்.

22-Apr-13
Velayudhan Done
வாங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா கூப்பிட்டு பந்தியில் அமர வைக்கும் கலாசாரம் மறைந்து.......
போங்க எடுத்துக்குங்க’ன்னு ஒருமாதிரியா சொல்லற.............”பவேட் ” கலாசாரம் பெருகி விட்டது.!!!

Unlike · · Share · 4 hours ago near Ahmedabad, Gujarat · 

23-Apr-13
Raajaachandrasekar@raajaacs 10h 

இரண்டு புள்ளிகளுக்கு இடையில் இருக்கும் தூரத்தை இடைவெளியாகப் பார்ப்பவர்கள் எளிதில் கடந்து விடுகிறார்கள்.

குழலி :) @guzhali_ 10h 

என் பிடிவாதங்களுக்கு அளவில்லா அங்கீகாரம் தருவதால்தான், உன்னிடம் மட்டும் பிடிவாதக்காரியாகிவிட்டேன். .




கருத்துகள் இல்லை: